குடவாசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சிறுமியின் மாமாவை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் மாமா திருமாவளவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து, அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், திருமாவளவன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சிறுமி மற்றும் அவரது தாய் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருமாவளவனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்