திருச்செந்தூர் சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா  நடைபெற்றது. . அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் , நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில்…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா  நடைபெற்றது. .

அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி கோவிலில் , நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது மாசி
திருவிழா. இந்த ஆண்டு மாசி திருவிழா, கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி , வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த
திருவிழாவின் 7-வது திருநாள் நடைபெற்றது.

கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து,
1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும்
நடந்தது. மேலும், அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடைபெற்றது. இதனையடுத்து, சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

மேலும், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் , வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், பிள்ளையன் கட்டளை மண்டபம் சென்றடைந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.