வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உழவாரப்பணிகள் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள புராதன மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் ஒன்பது ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீர் அமைத்துள்ளோம். இது தொடர்பான ஆய்வறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதம் ஒருமுறை உளவாரப் பணிகள் நடைபெறும்.
கோயில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது குறித்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வழக்கில் முடிந்த பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதலோடு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதற்கிடையே, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டைக்காடு பகுதியில் இந்து அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆகம விதிப்படி திருப்பணி செய்ய வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.