அதிமுக திமுக வெல்வது வெறும் நிகழ்வு என்றும் நாம் தமிழர் வென்றால் அது புரட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைபடுத்தும் இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வருவாய்களை மத்திய அரசு தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இந்தியாவை விற்பதில் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் போட்டி நடக்கிறதென நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை என்ற அவர், அதிமுக திமுக வெல்வது வெறும் நிகழ்வு என்றும் நாம் தமிழர் வென்றால் அது புரட்சி என்றும் கூறினார்.







