பாலக்காடு அருகே எர்ணாகுளத்திலிருந்து ஊட்டி சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் கேரளா பேருந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பாலக்காடு, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். எர்ணாகுளம் முழங்குருத்தி பாஸலியஸ் வித்யாநிகேதன் பள்ளியில் இருந்து ஊட்டிக்கு இந்த சுற்றுலா பஸ்சில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் சென்ற சுற்றுலா பேருந்து, பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பஸ்சானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது பயங்கரமாக விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் சுற்றுலா பஸ்சானது சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சுற்றுலா பேருந்தில் இருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சம் ஏற்பட்டுள்ளது.







