சென்னை பட்ஜெட்: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

பட்ஜெட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86…

பட்ஜெட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைய இணைப்பு வழங்கப்படும் எனவும், மாணவ, மாணவியரிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு 23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், பள்ளிகளை பராமரிப்பதற்காக 16 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.