வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு எண்ணும் அறைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, இந்திய…

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு எண்ணும் அறைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, இந்திய தலைமைத்தேர்தல் ஆணையருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, 10 தேர்தல் பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்…

மேலும் பேசிய அவர், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை என மொத்தம் 25 ஆயிரத்தும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.