சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி போலீசார் தாக்கியதில், உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது, சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி வடமலை முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி , வரும் 18ஆம் தேதிக்கு, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.








