முக்கியச் செய்திகள் தமிழகம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை ஆக.23க்கு ஒத்தி வைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது இந்த வழக்கில் செல்போன் அழைப்புகளை எடுத்துக் கொடுத்த செல்போன் நிறுவன அதிகாரி சேலத்தில் இருந்து வருகை தந்து தனது சாட்சியத்தை நீதி மன்றத்தில் பதிவு செய்தார். இவ்வழக்கில் ஜெயராஜின் செல்போன் அழைப்புகளின் பதிவுகளை சுட்டி காட்டி நீதிமன்றத்தில் சாட்சியத்தை பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது; புதிய உத்தரவு

G SaravanaKumar

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும்-டிஜிபி சைலேந்திரபாபு

Web Editor

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்!

Gayathri Venkatesan