சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது, திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயில்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது, திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயில் . இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். அவர் கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை, கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் எண்ணினர்.

இதில், ரூ. 68 லட்சத்து 07 ஆயிரத்து 562 ரொக்கமும், 3 கிலோ 330 கிராம் தங்கமும், 3 கிலோ 340 கிராம் வெள்ளியும், 46 அயல்நாட்டு நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன. கடந்த 13 நாட்களில் மட்டும் இந்த காணிக்கை கிடைக்கப்பெற்றதாக கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.