வேதாரண்யத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் நிலபரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ததால் உப்பு உற்பத்தி தடைப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.