தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக உப்பு உற்பத்தி
பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பு விலை உயரும் என்பதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சுமார் 25,000 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்ததாலும், வெயில் அதிகமாக அடித்ததாலும் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்றது. இதுவரை சுமார் 90% வரை சுமார் 20 லட்சம் டன் உப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டதால் உப்பிற்கு விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் தவித்து வந்தனர். உப்பு டன் ஒன்றுக்கு 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கியது உற்பத்தி பாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த திடீர் மழை காரணமாக உப்பு விலை உயரும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.