சேலம் அருகே அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 4 பேர் எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த 4 மாணவிகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்கள் வீட்டிற்கு நான்கு மாணவிகளும் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் விடுமுறை முடிந்து அடுத்தநாள் பள்ளிக்கு வராத நிலையில் இது தொடர்பாக ஆசிரியர்கள் மாணவிகளின் இல்லத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். மாணவிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளி விடுதியில் சென்று பார்த்தபோது பள்ளி விடுமுறையில் நான்குபேரும் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு விடுதிக்கு நேரடியாக வந்துள்ளது தெரியவந்தது.
மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிந்துவிட்ட பயத்தில் நான்கு மாணவிகளும் எலி மருந்து சாப்பிட்டுள்ளனர். உடனே நான்கு மாணவிகளையும் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பத்தாம் வகுப்பு மாணவி நால்வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திட்டி விடுவார்கள் என்ற பயத்தில் எலி
மருந்து சாப்பிட்டுள்ளதாக கூறினார். நான்கு மாணவிகளும் அபாய கட்டத்தை தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து நான்கு மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து உயிரிழப்புக்கு முயன்று வருவதை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை அழைத்து பேசி உள்ளதாகவும், விரைவில் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதும் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்