இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி…

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி போட்டிக்கு முன்பாக சாய்னாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த முதல் சுற்று போட்டியில் மலேசிய வீராங்கனை கிசோனாவை எதிர்த்து சாய்னா விளையாட இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply