சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது . ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை மாசி மாதம் பிறக்க உள்ளதால் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன்படி இன்று மாலை 5 – மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். இதற்கு பிறகு வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. மீண்டும் நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து நாளை அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அந்த நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று பிற்பகலுக்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
இதையும் படிக்கவும்: நண்பர்கள் புடைசூழ தேர்வெழுதிய மணப்பெண் : வைரல் ஆன மாணவியின் வீடியோ
17 தேதி வரை நடைபெற உள்ள இந்த மாசி மாத பூஜைகளுக்கு , இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் செய்துள்ளனர். இதனால் கோயிலுக்கு ரூ.360 கோடி வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா