இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி இன்று தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டீ காக், ஜேன்மென் மாலன் உள்ளிட்டோர் களமிறங்கினர். இவர்களில் மாலன் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். தேம்பா பாவுமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். இதனிடையே டீ காக் 27 ரன்னிலூம் ஐடன் மார்க்ராம் 4 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். ரஸ்ஸி வான் டெர் டுசென் கேப்டன் தேம்பா பாவுமாவுடன் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை நாளா புறமும் சிதறடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்த்திருந்தது.