உக்ரைன் – ரஷ்யா இடையே பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில் 40% ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவும் தங்களது வீரர்களை நாட்டு எல்லையில் குவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா, தங்களது வீரர்களை பயிற்சிக்காகவே அனுப்பியுள்ளதாக தெரிவித்து வருகிறது. மேலும் அவர்களது வீரர்கள் பயற்சி முடிந்து திரும்பி வருவர் என்று தெர்வித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் ரஷ்யாவின் வாதத்திற்கு எதிர்மறையாகவே இருந்துவருகிறது என்று அமெரிக்கா கூறிவருகிறது. இந்த நிலையில் ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களில் 40%க்கும் மேலானவர்கள் எந்நேரமும் தாக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய எல்லைகளில் குவிக்கப்பட்டுவரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர குறையும் பாடாக இல்லை என அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுக்காப்புத் துறை அதிகாரி லாயிட் ஆஸ்டின் கூறியதாவது, “உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்துவரும் உக்ரைன் விவகாரத்தில் 40% ரஷ்ய வீரர்கள் தாக்க தயார் நிலையில் உள்ளனர் என்ற அமெரிக்கா அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.