மயிலாடுதுறையில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை , கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி , சட்டமன்றத்தில் அறிவிப்போம் என வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
மேலும், இறந்த சாலை பணியாளர்களின் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு , வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும், 50க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள , ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: