இந்தியா செய்திகள்

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்!

ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் , செம்மரங்களை வெட்டிய இரண்டு பேர் அதை திருப்பதி
வழியாக சென்னைக்கு காரில் கடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த நாராயணவனம் போலீசார், திருப்பதி-சென்னை வழித்தடத்தில் உள்ள புத்தூர்
அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 25 செம்மர
கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் , காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில், கார் ஓட்டுநரான
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருதுசாமி , வேலுசாமி என்பவரை
கைது செய்த போலீசார் , காருடன் செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், காரில் இருந்து தப்பி ஓடிய நபர் சேஷாசலம் வனப் பகுதியில் , செம்மரங்களை
வெட்டி கடத்தி சென்னையில் இருக்கும் முக்கிய கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட  செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

—கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்!

Saravana

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு – காவல்துறை சந்தேகம்

Halley Karthik

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய பாஜக முதலமைச்சர்கள்

Mohan Dass