இந்தியா செய்திகள்

சிறுமியின் கண்ணில் இருந்து வெளியேறும் அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தெலங்கானா மாநிலத்தில் சிறுமி ஒருவரின் கண்ணிலிருந்து அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள், இரும்பு துகள்கள் வெளியாவதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுமி  சுஜன்யா. அரசு பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் இந்த சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஜன்யாவின் ஒரு கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பிளாஸ்டிக் துண்டுகள், பேப்பர், இரும்பு துகள்கள் ஆகியவை தொடர்ந்து வெளி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தினமும் இதுபோல் நடைபெறுவதால் சுஜன்யாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். எனவே சிகிச்சைக்காக சுஜன்யாவை கம்மம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சுஜன்யாவின் கண்ணில் இருந்து இவ்வாறான பொருட்கள் எப்படி வெளியாகின்றன என்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Jayasheeba

குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்

Web Editor

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள்: கெஜ்ரிவால் கருத்துக்கு பாஜக பதில் இதுதான்

EZHILARASAN D