உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இறுதிக் கட்டமாக தமிழ்நாடு திரும்பிய 9 மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
உக்ரைன் போர் காரணமாக இதுவரை உக்ரைனில் இருந்து 1,890 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர். இதில் இறுதிக் கட்டமாக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப்பிய 9 மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களிடம் பயணம் குறித்தும் உக்ரைன் சூழல் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பி.ராஜா கலாநிதி வீராச்சாமி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய திருச்சி சிவா, இந்த காலத்தில் மாணவர்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக மொழி பிரச்சினையை சந்தித்தனர். உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்தவுடன் தமிழக அரசு அதிகாரிகள் உதவினர் என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









