முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

8வது முறையாக மீண்டும் வருகை | பிரதமர் மோடி இன்று நெல்லையில் பிரசாரம்!…

இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டுக்கு  பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வகையில் இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

Web Editor

மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

Web Editor

நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது! – குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading