அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்களும் ஒரு நாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், அதன்பின் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது 41 வயதாகும் ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 23 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் பயணம் நிறைவு பெற்றதாகவும், கிரிக்கெட் வாழ்வில் தமக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.