முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி,  அவரது நினைவிடத்தில் மரியாதை…

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி,  அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மதுரை சென்றார்.

இந்தநிலையில், முதல் நிகழ்வாக,  இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து,  திருப்புவனம்,  மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அங்கு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  தங்கம் தென்னரசு,  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,  பெரியகருப்பன்,  கீதாஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.