முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி,  அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மதுரை சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில், முதல் நிகழ்வாக,  இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து,  திருப்புவனம்,  மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அங்கு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  தங்கம் தென்னரசு,  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,  பெரியகருப்பன்,  கீதாஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் | அதிகாரிகள் உறங்குகிறார்களா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

Web Editor

அயோத்தி கோயிலுக்கு 1.75 கிலோ எடையில் வெள்ளி துடைப்பம்!

Web Editor

செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும் அமலாக்கத்துறை – விசாரணை அறிக்கையை சமர்பிக்க திட்டம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading