கொரோனா பரவல் தொடர்பான ஆராய்ச்சி; உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா அரசு தடை!

உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளில் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சுக் குழு தங்கள் நாட்டுகுள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மாதம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் சீனாவுக்குள் நுழைய தேவையான ஆவணங்களில் ஒன்றான விசா வழங்காமல் அந்நாட்டு அரசு தாமதித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply