கேரளாவில் மத நல்லிணக்கம், அமைதியான வாழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புலம்பெயர் கேரளத்தவர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கடந்த 6 ஆண்டுகளில் கேரளா அனைத்து துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, முதலீடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அபார வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறினார்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2023/06/postcard-1-2023-06-12T121119.452.jpg?resize=1400%2C787&ssl=1)
மத நல்லிணக்கம் அமைதியான வாழ்வு உறுதி செய்யப்படுவதால் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளதாகவும், கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். உங்கள் மாநிலம் கேரளா, எனவே உங்கள் நிலம் மேலும் செழிக்க தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.