பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனம் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
7/12 We are reducing the Central excise duty on Petrol by ₹ 8 per litre and on Diesel by ₹ 6 per litre.
This will reduce the price of petrol by ₹ 9.5 per litre and of Diesel by ₹ 7 per litre.It will have revenue implication of around ₹ 1 lakh crore/year for the government.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 ஆகவும், டீசல் மீதான லிட்டருக்கு ரூ.6 ஆகவும் குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும். இதனால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் தாக்கத்தை அரசுக்கு ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.







