முக்கியச் செய்திகள்தமிழகம்

மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பாக ஓட்டேரி நல்லா கால்வாய் இடையே புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்படும் ஸ்டீபன்சாலை மேம்பாலப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த பாலத்திற்கான ஒப்பந்தப்பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இறுதி செய்யப்பட்டதாகவும், முதலமைச்சரே நேரில் வந்து ஆய்வு செய்திருப்பதாகவும் கூறினார். கட்டுமானப் பணி நடைபெறுவதால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், பணிகள் 70 சதவிகிதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் உறுதியளித்தார்.

பருவமழையின் போது கடந்த ஆண்டுகளில் தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தேங்கவில்லை எனக்கூறிய அமைச்சர், தற்போது தண்ணீர் தேங்கக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மோட்டார்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த ஆண்டு பருவமழையை மக்கள் பாதிக்காதவாறு சமாளிக்க தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜக

Web Editor

“நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” – நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் புகழாரம்!

Web Editor

ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading