25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஒரே நாளில் ரூ.576 கோடிக்கு ஏலம் போன அரிய கற்கள்!! – எங்கு தெரியுமா??

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த ரூபி கற்கள் மற்றும் அரிய பிங்க் நிற வைரம் ஆகியவை தலா ரூ.288 கோடிக்கு அமெரிக்காவில் ஏலம் போனது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பை ஏல மையத்தில் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த, மதிப்புமிக்கதாக கருதப்படும் ரூபி கற்கள் மற்றும் அரிய பிங்க் நிற வைரம் பொது ஏலத்திற்கு விடப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த ஏலத்தில் 55 கேரட் ரூபி கல், 286 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. அதேபோல, அந்த மையத்தில் பொது ஏலத்திற்கு விடப்பட்ட 11 கேரட் அரிய எடெர்னல் பிங்க் வைரமும், அதே விலைக்கு ஏலம் போனது.

இதையும் படியுங்கள் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – கேஸ்பர் ரூட்!!

ஏலம் போன இந்த ரூபி கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதாகும். இந்த இரண்டு அரிய கற்களும் ஒரே நாளில், ஒட்டுமொத்தமாக 576 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளதாக ஏல நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர் விவகாரம் : காவல் ஆணையர் அமல் ராஜ் நேரில் ஆய்வு..!

Web Editor

உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு

G SaravanaKumar

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் நடால்

Web Editor