ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்றுள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் டெல்லி-சௌராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை விழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் சௌராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3வது பந்தில் துருவ் ஷோரேவை போல்ட் செய்தார். அடுத்த இரு பந்துகளில் வைபவ், யாஷ்துல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்டிரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை உனத்கட் படைத்தார்.தனது 2வது ஓவரில் ஆயுஷ் பதோனி, ஜான்டி சித்து ஆகியோரின் விக்கெட்டுகளையும் எடுத்து 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணியின் முதல் 5 பேட்டஸ்மேன்களில் 4 பேர் அவுட்ஆனார்கள். இதனால் டெல்லி அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. உனத்கட் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
31 வயதாகும் உனத்கட் 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் பெரிதளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், 12 வருடங்களுக்கு பின்னர் 2022ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மீண்டும் அவர் இடம் பிடித்தார். அதில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த உனத்கட், தற்போது ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்.