27.8 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பான் இந்தியா படத்தில் மீண்டும் ராணா

பிரபல நடிகர் ராணா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படம் ஒன்றில் மீண்டும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

பிரபல தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததற்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனான இவர், தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியிலும் நடித்து வரும் ராணா, கடைசியாக பிரபு சாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா படமாக, இது தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் வெளியானது.

இதையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்க இருக்கிறார். இப்போது பிரியாமணி, சாய் பல்லவி, நந்திதா தாஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோருடன் விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

இதையடுத்து அவர் மீண்டும் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கிறார். மூத்த தயாரிப்பாளர் கோபிநாத் அச்சந்தா, ராம்பாபுவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்க போகும் டைரக்டர், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading