ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், அங்கு அமைச்சரவை மாற்றம் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து முதலமைச்சர் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. ஹேமராம் சவுத்ரி, மகேந்திரஜீத் சிங் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி மற்றும் விஸ்வேந்திர சிங் உள்பட 15 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் ரமேஷ் மீனா, விஸ்வேந்ஹிர சிங் ஆகியோரும் அமைச்சர் களாயினர். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.