ராஜபாளையம் அருகே உள்ள எக்கலா தேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழியில் திராளான பக்கதர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எக்கலா தேவி அம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் நடைபெற்றது. கடந் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதணை நடைபெற்றது. ரிஷப வாகனம், பூப்பல்லக்கு, குடைச் சப்பரம் மற்றும் தண்டியல் சப்பரங்களில் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி நேற்று இரவு நடைபெற்றது. இரவு
தட்டிச் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிறைவடைந்த பின்னர் சேத்தூர், காமராஜர்
நகர், தளவாய்புரம், செட்டியார்பட்டி, முத்துசாமிபுரம், முகவூர் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள்
பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
— அனகா காளமேகன்







