கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, சிறுவன் ஒருவருக்கு ஷு வாங்கி தருவதாக கூறியிருந்தார். தற்போது ராகுல், ஷு வாங்கி அனுப்பியது சிறுவனிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் விளையாட்டு தேவைக்கு ஷு வாங்கி தருவதாக உறுதி அளித்திருந்தார். அது போன்று ஒன்பது நாட்களுக்கு பிறகு ஷு ஒன்று வாங்கி அனுப்பி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அந்த சிறுவன் ஆண்ட்ரானி பெலிக்ஸ் நமது நியூஷ் 7 தமிழிற்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது, சாலையோரம் நிற்கும்போது காரை நிறுத்தி அருகில் வந்த ராகுல் காந்தி, தம்பி வா என அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்தார்.
என்ன படிக்கிறாராய் , எந்த விளையாட்டில் ஆர்வம் என கேட்டார் ரன்னிங் என கூறியதை தொடர்ந்து ஷு வாங்கி அனுப்பி உள்ளார். மேலும் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார் அந்த ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும், அவருக்கு நன்றி நான் champion ஆன பிறகு கண்டிப்பாக அவரை சந்திப்பேன்.