ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுப்பேன் என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்,
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் முன்பு கோல்டன் குளோப் விருதை வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த 13ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது .மேலும் ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் பாடப்பட்டதோடு, நடன கலைஞர் திரைப்படத்தில் வருவது போன்று உடையணிந்து நடனமாடினர். நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்று இருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் ராஜமவுலி அளித்துள்ள பேட்டியில், “ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுப்போம். அதற்கான பணிகளை வேகமாக தொடங்குவோம்” என்றார்.
‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றபோதே ஆர் ஆர் ஆர் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து தற்போது அதனை உறுதிப்படுத்தி உள்ளார். ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.