அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெயில் அதிகமாக இருக்கும்போது செய்தியாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என ஜெயக்குமாரிடம் பல முறை நான் சொல்லி உள்ளேன். வெயில் அதிகமாக உள்ளதால் நேரடியாக அது தலைக்கு உள்ளே சென்றுள்ளது.
கொள்ளையடித்த அமைச்சர்கள் யாரும் தப்பிக்க முடியாது. தமிழக முதமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கமாக தான் நடவடிக்கை எடுத்து வருகிறார். காவல்துறை ஒரு பக்கம் தான் நடவடிக்கை எடுக்கிறது.
முதல்வர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை கட்சியை நடத்த முடியாது.
சின்னமே இல்லாமல் போனாலும் நான் தனியாக நின்று வெற்றி பெறுவேன் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்து கொண்டுள்ளார்.
ஜெயகுமார் மீண்டும் ஓபிஎஸ் குறித்து தவறாக பேசினால் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் குழந்தையுடன் ஒருவர் என் அருகில் இருப்பார்.
அமைச்சர்கள் இரண்டு பேர் ஓபிஎஸ் காலில் விழுந்து இணைப்புக்கு அழைத்து வந்தார்கள்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் காலில் விழுந்து தங்களை கைது செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த அரசு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளது.
கட்சி ஒன்றாக சேர்ந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடம் இல்லை. ஜெயக்குமார் மீது பல புகார்கள் உள்ளது. அவரது உறவினர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். நீயே ஒரு கிரிமினல் குற்றவாளி. அவர் மீது எல்லாரும் கோவத்தில் உள்ளனர்.
தேனியில் சென்று ஓபிஎஸ் வீட்டை சூரையாடுவேன் என உதயகுமார் சொல்லி உள்ளார். அதிமுக அலுவலகத்தில் ஒரு வாரம் ரவுடிகளை வைத்திருந்தனர்.
ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தை சூறையாடுவேன் என்று சொன்ன ஆர்.பி. உதயகுமாரை காவல்துறை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. நேற்று தான் முதல் முறையாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீதும் FIR போடப்பட்டுள்ளது. கோயில் என்று சொல்கிறார்கள். ஏன் அதை பூட்டி வைத்தீர்கள். அங்கு திருட என்ன வைத்துள்ளீர்கள் என ஓபிஎஸ் கேட்டுள்ளார் என்றார் புகழேந்தி.