முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

காணாமல் போன வேட்பாளர் மயங்கி நிலையில் மீட்பு!

புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் ஏனாம் தொகுதியில் காணாமல் போன சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மாடி கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் சுயேச்சையாக துர்கா பிரசாத் பெம்மாடி என்பவர் போட்டியிடுகிறார். இவரை கடந்த ஒன்றாம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொத்தபத்துலா சாந்தி ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


ஏனாம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றிரவு கோதாவரி ஆற்றுப்படுகை அருகே மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மயங்கிய நிலையில் உள்ளதால் அவர் எப்படி காணாமல்போனார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டாரா அல்லது யாரேனும் அடித்து அங்கேயே விட்டு விட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

Web Editor

மூன்றாவது தவணை தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பலனளிக்குமா?; சோதனையை துவக்கிய பாரத் பயோடெக் நிறுவனம்

G SaravanaKumar

அடங்குமா, அடக்குமா? கொல்கத்தா -டெல்லி இன்று மோதல்

Halley Karthik