முக்கியச் செய்திகள்இந்தியா

புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின்கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் வரும் ஜூன் 16-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திடீரென வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 முதல் ரூ.2.70 வரையும், 101 முதல் 200 யூனிட்டுகளுக்கு 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 ரூபாயில் இருந்து யூனிட்டுக்கு ரூ.6 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டிற்கு 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக மின் கட்டணம் உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வர்த்தக பயன்பாட்டில், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணமானது நாளை மறுநாள் (ஜுன் 16) முதல் நடைமுறைக்கு வரும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டண உயர்வு அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி சென்ற 4 பேர் பத்திரமாக திரும்பினர்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் 40-க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி கட்சிகள்!

Web Editor

ஜம்மு – காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading