10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பிண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கும் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது http://www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாகவோ சான்றிதழ்களைப் பெறலாம். 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுத் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வில் பங்கேற்காதவர்களுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்வர்களுக்கு ஜூலை 25 முதலும், 10ஆம் வகுப்புத் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 2 முதலும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான தகவல்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரிவிக்கவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா