முக்கியச் செய்திகள்தமிழகம்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 13,331 பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என்ற அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது.

இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

UK Official singles Chart பட்டியலில் BTS ஜங்கூக்கின் பாடல்!

Web Editor

திருக்குறுங்குடியில் நடைபெற்ற திருத்தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

Web Editor

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading