படிப்படியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் அரசகுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி சார்பில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே சேர்க்கை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.







