அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட ஒத்திகை நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள, 2ஆயிரத்து 300 மையங்களில் நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கள்கிழமை (ஜனவரி 11ஆம் தேதி) மாலை 4 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.