அனைத்து மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்து கொள்கிறார்.
ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிந்தனையாளர்கள் கூட்டம் 2 நாட்களாக நடக்கிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் தீவிரவாத நடவடிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 64 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 90 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2019ம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் ரூ.57 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளது. சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றங்களை கையாள்வதற்கு திட்டமிட இந்த சிந்தன் ஷிவிர் உதவும் என்றார். 2024-க்குள் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.