டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
India’s @pravinarcher wins the 1/32 elimination round 6-0 to qualify for the next round. Stay tuned for more updates. #Archery #Olympics #Cheer4India pic.twitter.com/iTxP3Lnix5
— SAIMedia (@Media_SAI) July 28, 2021
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த கால்சனை எதிர்கொண்டார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரவீன் ஜாதவ், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த சுற்றில் அமெரிக்காவின் எலிசனை பிரவீன் ஜாதவ் எதிர்கொள்கிறார்.