37.7 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் – சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்!

இந்த சீசனின் மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான பிரதீப் சக போட்டியாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யாரும் எதிர்பாராத வகையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து வெளியேறினர். பவா செல்லதுரை உடல்நிலை காரணமாகத் தாமாகவே முன்வந்து வெளியேறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், 4-வது வார இறுதியில் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்னபாரதி ஆகிய 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். 5-வது வாரத்தில் நடந்த போட்டியில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் பிரதீப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டது.

வார இறுதி எபிசோட் தொடங்கியதுமே, மாயா, விஷ்ணு, பூர்ணிமா உள்ளிட்ட பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் கைகளில் கட்டியிருந்த செங்கொடியை உயர்த்தி ‘உரிமைக் குரல்’ எழுப்பினார்கள். அனைவரின் புகாரும் பிரதீப் மீதுதான். தகாத வார்த்தை பேசுகிறார், எல்லை மீறுகிறார், இரவில் தூங்க பயமாக இருக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதுவரை பிரதீப் தரப்பு விளக்கத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கமல், மணியின் அந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு பிரதீப்பிடம் ‘உங்கள் பதில் வேண்டாம். உட்காருங்கள்’ என்று அவரை ஆஃப் செய்து அமரச் செய்தார். பின்னர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது தொடரச் செய்யலாமா என்று ஒவ்வொரு போட்டியாளராக கன்ஃபெஷன் ரூமில் அழைத்து தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார் கமல். இதில் விசித்ரா, கூல் சுரேஷ், அர்ச்சனா, தினேஷ் தவிர்த்து மற்ற அனைவரும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிடலாம் என்றே கூறியிருந்தனர். இறுதியாக பிரதீப்பை அழைத்த கமல், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

இந்த நடவடிக்கைக்கு பிரதீப் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களின் விமர்சனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். பிரதீப் நண்பரான நடிகர் கவின் தனது எக்ஸ் பக்கத்தில், “உன்னைத் தெரிந்த மக்களுக்கு நீ யாரென்று தெரியும்” என பதிவிட்டுள்ளார்.பாடலாசிரியரும் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளருமான சினேகன், “நீ பார்க்காத ரணங்களும் இல்லை…நீ பார்க்காத வலிகளும் இல்லை… பிரதீப்… இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை…. வெளியே கிடக்கு வா…” எனப் பதிவிட்டுள்ளார்.

முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவ்னி தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர். அமீர் இதனை, “நியாயமற்றது” என விமர்சித்துள்ளார். பாவ்னி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் “எனது பிக்பிஸ் 7 கோப்பைகள்” என அவர் வீட்டில் இருந்த போது வாங்கிய லைக்ஸ், டிஸ்லைக்ஸ் மற்றும் கோல்டன் ஸ்டாரைப் புகைப்படமாகப் பகிர்ந்துள்ளார். இதற்கு மாற்றான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading