ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில் 65 கிலோ…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து கட்டடங்களை விட்டு மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.