கோடைக் காலத்தில் மின் விநியோகம்?

கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை…

கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடந்த ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வரும் 16ம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் உள்ளதாகவும், கோடை காலத்திலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.