மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. 22 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யபட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நேற்று 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் 2,3,4ம் அலகுகள் நிறுத்தப்பட்டது. ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு இன்று காலை முதல் 4-வது அலகில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் புதிய அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த மின் உற்பத்தியான 1,440 மெகாவாட்டுக்கு பதிலாக 420 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு அனல் மின் நிலையங்களிலும் 1,020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது