முக்கியச் செய்திகள் சினிமா

பொன்னியின் செல்வன் படம் குறித்து வெளியான புது அப்டேட்

பொன்னியின் செல்வன் படம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கல்கியின் பிரமாண்டமான ’பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்கி வரு கிறார். இந்த படம் 2 பாகங்களாக தயாராகி வருகிறது. படத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் தடைபட்ட படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு பின் பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சமீபத்தில் தங்களுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்து படம் அடுத்தாண்டு வெளியாகும்  என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் உயிரிழப்பு

EZHILARASAN D

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!

Jeba Arul Robinson

மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை ஏன்? : அரசியல் பின்னணி என்ன?

Lakshmanan