பிலிப்பைன்ஸில் 92 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
சுலு மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரான பதிகுல் என்ற நகர் அருகே இருக்கும் பங்கால் கிராமத்தில் சி-130 ஹெர்குலஸ் வகை விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. சாகயான் டி ஓரோ நகரிலிருந்து ராணுவ வீரர்களை சுலு நகருக்குக் கொண்டுசென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் விமானிகள் 3 பேர், 5 பணியாளர்கள் உள்ளிட்ட 92 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.







